கோமுக தீர்த்தம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்

கோமுக தீர்த்தம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்

Author: SARAVANANARUNACHALAM April 13, 2024 Duration: 3:29
கோமுக தீர்த்தம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் *கோமுக தீர்த்தம் என்றால் என்ன?* *சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் ... கோவில்களில் தெய்வங்களுக்கு அபிஷேக அரிய பல புண்ணிய திரவிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் மகா தீர்த்தம் இந்த கோமதி ஒன்றாகும்... இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது. கோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர்... இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர். கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும். இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️ பூமியில் ஓடும் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது... இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். கோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில்,வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்து விட வேண்டும். இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது எம பயம் நீங்கும். கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும். கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் ஆரோக்கியம் சீர்ப புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் திருமண தடை நீங்கும். பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் உதவிகள் கிட்டும்.

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM எனும் இந்தப் பாட்காஸ்ட், செம்மொழியான தமிழின் ஆழத்தையும் அழகையும் குடும்பத்தினருடனும், சிறுவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாகும். இதை வழங்குபவர் SARAVANANARUNACHALAM. பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதில் உள்ள நம்பிக்கையே இந்தக் குரல்நூல்களுக்கான அடித்தளம். இங்கே, நீங்கள் கேட்கும் கதைகளும் வாசிப்புகளும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை ஒரு மொழியின் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள். சங்க இலக்கியங்களின் கனிவு, மாணவர்களுக்கான கல்விச் செல்வங்கள், கற்பனை நிறைந்த சிறுகதைகள், இசையமைதியான பாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை இந்தப் பாட்காஸ்ட் மூலம் நேரடியாகக் கேட்க முடியும். வழங்குபவர் தாமே இணையத்தில் தேடிப் படித்து, தேர்ந்தெடுக்கும் இலக்கியத் துளிகளை உங்கள் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தமிழின் வரலாற்று வேருக்கும் நவீன வாழ்விற்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழின் இனிமையில் மூழ்க, இது ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்தக் குரல்நூல்கள் குட்டலூரிலிருந்து வெளிவருகின்றன, ஆனால் அவை தமிழ் பேசும் எந்த இதயத்தையும் சென்றடையும். இலக்கியத்தின் மீதான ஒரு தனிப்பட்ட அன்பும், மொழியைப் பாதுகாக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒலிக்கின்றன.
Author: Language: Tamil Episodes: 100

TAMIL PODCAST IN CUDDALORE.
 தமிழால் இணைவோம்

 வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
Podcast Episodes
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவணன் . [not-audio_url] [/not-audio_url]

Duration: 16:15
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன் [not-audio_url] [/not-audio_url]

Duration: 15:53
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:45
சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் *சண்டிகேஸ்வரர்* சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரரை வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம். *வேண்டுதல்களை நிறைவேற்ற…
திருஞானசம்பந்தர் சுவாமிகளுக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் திருவீழிமிழலையில் படிக்காசு பெறுதல் [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:40
திருஞானசம்பந்தர் சுவாமிகளுக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் திருவீழிமிழலையில் படிக்காசு பெறுதல் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
திருக்கோலக்கா#சீர்காழி#தாளபுரீஸ்வரர் திருஞானசம்பந்தர் அருளியது ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:42
திருக்கோலக்கா திருஞானசம்பந்தர் அருளியது ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் #தாளபுரீஸ்வரர்# ஓசை நாயகி #சீர்காழி ரயிலடி அருகில்
திருக்கயிலாயம் 6-055 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது ஆறாம் திருமுறை ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:43
திருக்கயிலாயம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது ஆறாம் திருமுறை ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்

«1...678910